காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை தமிழக பாஜகவின் மீதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைதும். அவர் திறந்தவெளி கல்வியில் படித்து வந்த பிஏ பாடத்திற்கான பரீட்சையினை ஆள்மாறாட்டம் செய்து எழுதினார் என்ற புனையப்பட்ட குற்றச்சாட்டும்.

உண்மையில் கல்வி மாபியாக்களின் கூடாரம் தமிழகம் என்றால் அதன் ஊற்றுக்கண் திமுக என்று தான் கூற வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடு, குளறுபடி. மருத்துவம் பயில மதிப்பெண்ணை விட பணமே பிரதானம். பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற குறுக்கு வழியை நாடிய போதிலும். பேருக்கு கூட விசாரணை இல்லை. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்டியது. .

அண்ணா பல்கலைக்கழகதில் வினாத்தாள் திருத்தத்தில் நடந்த பல கோடி மதிப்பிலான முறைகேடுகளில் முகாந்திரம் இருந்த போதிலும், எந்த துறையும் விசாரணைக்கு துணியவில்லை. அதனை களைய மத்திய அரசின் வழிகாட்டலில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்ட சூரப்பா தேவைப்பட்டார்.

பல லட்சம் பேர் பங்கு கொள்ளும் தமிழ்நாடு அரசு பனியாளார் தேர்வாணைய தேர்விலும் நம்பக தன்மை இருப்பதாக தெரியவில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முறைகேடுகளை களைய எடுத்த முயற்சிகளில் கடுகலவை கூட திமுக ஆட்சியாளர்கள் செய்ததில்லை. தங்கள் ஆட்சியில் கட்சியினருக்கு அரசுப் பணியில் சலுகை என்று ஒரு அமைச்சர் வெளிப்படையாக கூறும் அளவில்தான் அவர்களின் நேர்மை உள்ளது.

இந்நிலையில் பெயரளவுக்கு பேருக்கு பின்னே அலங்காரமாக மட்டுமே கூடிய திறந்தவெளி கல்வியில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டாராம், அதை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். என்ற தோனியில் பொய் வழக்குப் புனைந்துள்ளார்கள். அப்படி தமிழகம் முழுவதும் உண்மையில் பரிசோதித்திருந்தாள் பலரும் சிக்கியிருப்பார்கள் என்பதே நிதர்சனம். காவல்துறை சமீபத்தில் சேலத்தில் விலைமதிப்பற்ற கனிமத்தினை கடத்தி சென்ற லாரியை விடுத்து, அதனை பின்தொடர்ந்த பத்திரிகையாளரை பிடித்த கதைதான். என்ன செய்ய ஆள்பவர்கள், ஆட்டி படைப்பவர்கள் அப்படி.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...