காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை தமிழக பாஜகவின் மீதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைதும். அவர் திறந்தவெளி கல்வியில் படித்து வந்த பிஏ பாடத்திற்கான பரீட்சையினை ஆள்மாறாட்டம் செய்து எழுதினார் என்ற புனையப்பட்ட குற்றச்சாட்டும்.

உண்மையில் கல்வி மாபியாக்களின் கூடாரம் தமிழகம் என்றால் அதன் ஊற்றுக்கண் திமுக என்று தான் கூற வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடு, குளறுபடி. மருத்துவம் பயில மதிப்பெண்ணை விட பணமே பிரதானம். பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற குறுக்கு வழியை நாடிய போதிலும். பேருக்கு கூட விசாரணை இல்லை. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்டியது. .

அண்ணா பல்கலைக்கழகதில் வினாத்தாள் திருத்தத்தில் நடந்த பல கோடி மதிப்பிலான முறைகேடுகளில் முகாந்திரம் இருந்த போதிலும், எந்த துறையும் விசாரணைக்கு துணியவில்லை. அதனை களைய மத்திய அரசின் வழிகாட்டலில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்ட சூரப்பா தேவைப்பட்டார்.

பல லட்சம் பேர் பங்கு கொள்ளும் தமிழ்நாடு அரசு பனியாளார் தேர்வாணைய தேர்விலும் நம்பக தன்மை இருப்பதாக தெரியவில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முறைகேடுகளை களைய எடுத்த முயற்சிகளில் கடுகலவை கூட திமுக ஆட்சியாளர்கள் செய்ததில்லை. தங்கள் ஆட்சியில் கட்சியினருக்கு அரசுப் பணியில் சலுகை என்று ஒரு அமைச்சர் வெளிப்படையாக கூறும் அளவில்தான் அவர்களின் நேர்மை உள்ளது.

இந்நிலையில் பெயரளவுக்கு பேருக்கு பின்னே அலங்காரமாக மட்டுமே கூடிய திறந்தவெளி கல்வியில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டாராம், அதை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். என்ற தோனியில் பொய் வழக்குப் புனைந்துள்ளார்கள். அப்படி தமிழகம் முழுவதும் உண்மையில் பரிசோதித்திருந்தாள் பலரும் சிக்கியிருப்பார்கள் என்பதே நிதர்சனம். காவல்துறை சமீபத்தில் சேலத்தில் விலைமதிப்பற்ற கனிமத்தினை கடத்தி சென்ற லாரியை விடுத்து, அதனை பின்தொடர்ந்த பத்திரிகையாளரை பிடித்த கதைதான். என்ன செய்ய ஆள்பவர்கள், ஆட்டி படைப்பவர்கள் அப்படி.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...