உக்‍ரைனின் அண்டை நாடுகளுக்‍கு செல்லும் அமைச்சரகள்

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்‍ரைனில் சிக்‍கியுள்ள இந்தியர்களை அதன் அண்டைநாடுகள் வழியே மீட்டுவரும் மத்திய அரசு, அப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்று கண்காணிக்க உள்ளனர்.

ரஷிய படைகளின் தாக்குதல்காரணமாக தங்கள் வான்எல்லையை உக்‍ரைன் மூடியதையடுத்து, அங்கிருந்து வெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்‍கிக்‍கொண்டனர். அவர்களை விமானம் மூலம் உக்‍ரைனிலிருந்து அழைத்து வர முடியாததால், தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து இந்தியாவுக்‍கு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்துவருகிறது.

இதற்காக ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு, சனிக்கிழமை முதல் இந்தியர்களை அழைத்துவர சிறப்புவிமானங்களை இயக்‍கி வருகிறது.

இதுவரை சுமார் 1,000 பேரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறாவதுமீட்பு விமானம் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் இன்று திங்கள்கிழமை புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியபடைகளின் தாக்குதலால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று திங்கள்கிழமை இரண்டாவது உயா்நிலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் கலந்துகொண்டாா். கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை விரைந்துமீட்கும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணிகளை ஒருங்கிணைபதற்காக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்றுகண்காணிக்க உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டுள்ளது. விரைவில் மாணவர்கள் ரயில் நிலையங்களை நோக்கிச்சென்று நாட்டின் மேற்குப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இந்தியதூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ரஷியாவின் படையெடுப்பின்போது கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்தனர்.

உக்ரைன் தனது வான்வெளிபாதையை மூடுவதற்கு முன்பு ஒருசிலர் மட்டுமே வெளியேற முடிந்தது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சுமார் 16,000 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது, அவர்கள் விடுதியின் அடித்தளங்கள் மற்றும் வெடிகுண்டுமுகாம்களில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷியா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
ஆகியோருடன் தனித்தனியாக பேச்சு நடத்தி பிரதமர் மோடி, அவர்களிடம் போர் பதற்றத்தைத் தணிக்கும்படி வலியுறுத்தியதுடன், உக்ரைனில் இருந்து இந்தியமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...