உக்‍ரைனின் அண்டை நாடுகளுக்‍கு செல்லும் அமைச்சரகள்

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்‍ரைனில் சிக்‍கியுள்ள இந்தியர்களை அதன் அண்டைநாடுகள் வழியே மீட்டுவரும் மத்திய அரசு, அப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்று கண்காணிக்க உள்ளனர்.

ரஷிய படைகளின் தாக்குதல்காரணமாக தங்கள் வான்எல்லையை உக்‍ரைன் மூடியதையடுத்து, அங்கிருந்து வெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்‍கிக்‍கொண்டனர். அவர்களை விமானம் மூலம் உக்‍ரைனிலிருந்து அழைத்து வர முடியாததால், தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து இந்தியாவுக்‍கு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்துவருகிறது.

இதற்காக ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு, சனிக்கிழமை முதல் இந்தியர்களை அழைத்துவர சிறப்புவிமானங்களை இயக்‍கி வருகிறது.

இதுவரை சுமார் 1,000 பேரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறாவதுமீட்பு விமானம் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் இன்று திங்கள்கிழமை புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியபடைகளின் தாக்குதலால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று திங்கள்கிழமை இரண்டாவது உயா்நிலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் கலந்துகொண்டாா். கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை விரைந்துமீட்கும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணிகளை ஒருங்கிணைபதற்காக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்றுகண்காணிக்க உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டுள்ளது. விரைவில் மாணவர்கள் ரயில் நிலையங்களை நோக்கிச்சென்று நாட்டின் மேற்குப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இந்தியதூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ரஷியாவின் படையெடுப்பின்போது கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்தனர்.

உக்ரைன் தனது வான்வெளிபாதையை மூடுவதற்கு முன்பு ஒருசிலர் மட்டுமே வெளியேற முடிந்தது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சுமார் 16,000 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது, அவர்கள் விடுதியின் அடித்தளங்கள் மற்றும் வெடிகுண்டுமுகாம்களில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷியா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
ஆகியோருடன் தனித்தனியாக பேச்சு நடத்தி பிரதமர் மோடி, அவர்களிடம் போர் பதற்றத்தைத் தணிக்கும்படி வலியுறுத்தியதுடன், உக்ரைனில் இருந்து இந்தியமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...