முத்து ராமலிங்க தேவரோடு தான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்.

சென்னையில் பேட்டியளித்த அவர், “இந்தி மொழி யாரும் ஆதரிப்பதால் வளர்ப் போவதில்லை. முதலில் தமிழை காப்பாற்றுவோம். இந்தியை தடுபதிலேயே குறியாக இருக்காதீர்கள்.

தமிழ் எவ்வளவு அழித்துவருகிறது தெரியுமா? சுற்றி பார்த்துவிட்டு சொல்லுங்கள் எத்தனை போர்டுகளில் தமிழ்இருக்கிறது என்றும்? எல்லாவற்றிலும் ஆங்கிலம்தான். போர்டில் இந்தி இருந்தால் தாரைவைத்து அழிக்கிறார்கள். அங்கு தமிழ் இல்லை என்று யாராவது கவலைப் படுகிறார்களா?

தமிழ் இல்லாத இடத்தில் எழுதுங்கள். இன்னொரு மொழியைஅழிக்காதீர்கள். சாக கிடக்கும் நமது குழந்தைக்கு சோறு கொடுப்பீர்களா? அல்லது மற்றவரின் சோற்றில் உப்பில்லை என்பீர்களா? தமிழ் நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ்பாடமே இல்லை. இன்று வளரும் மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியவில்லை. படிக்க தெரியவில்லை. இதைகேட்க இங்கு யாரும் இல்லை.

இந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். நம் தாய் மொழி தமிழை தக்க வைக்கவேண்டும் தானே? அதை யார் இங்கு செய்கிறார்கள். அதுகுறித்து யாருக்கும் கவலையில்லை. எல்லாமே அரசியல்தான். தமிழ்பற்று வேண்டும். ஆனால், தமிழை அரசியலாக்கக் கூடாது. இங்கு பலபேர் தமிழை அரசியலாக்குகின்றனரே தவிர யாரும் தமிழ் பற்றோடு குரல் கொடுக்க வில்லை.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக்குங்கள். பல பள்ளிகளில் தமிழ் விருப்பபாடமாக மட்டுமே உள்ளது. இதற்காக இங்கு யார் குரல் கொடுக்கிறார்கள். தமிழ்மொழி என்ன விருந்தாளியா? தமிழை வாழ வைப்பவர்தான் தமிழன். இந்தியை ஒதுக்கினால் தமிழன் என்று சொல்வ தெல்லாம் வேஸ்ட். மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இளையராஜா அம்பேத்கரை ஒப்பிட்டது அவருடைய விருப்பம். அது அவரதுகருத்து. இதில் சாதியை கொண்டு வருகிறார்கள். பெரியார் இல்லை என்றால் இசையமைத்து இருப்பீர்களா என கேட்கிறார்கள். அவருக்குமுன் எத்தனையோ கவிஞர்கள் இருந்துள்ளார்கள். அவர்களையெல்லாம் பெரியாரா வளர்த்து விட்டார். இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தமானவர்.

கருத்துசொல்வது அவரது உரிமை. இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார். என்னை பொறுத்தவரை இன்னொருவரோடும் ஒப்பிட்டு இருக்கவேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரோடு. அவர்தான் தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என்று சொன்னார். மோடியும் தேசியத்தோடும் தெய்வீகத்தோடும் இருக்கிறார். உண்மையாக முத்துராமலிங்க தேவரோடு தான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்.

தேசியத்தை நேசிப்பவரை எனக்குபிடிக்கும். நான் ஆத்திகன். நாத்திகம் பேசிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவாக பேசுபவரை பிடிக்காது. ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை என்று சொல்லிவிட்டு சிவனைஇல்லை என்று சொல்லுங்கள். அதுதான் ஆண் மகனுக்கு அழகு. அவரவர் மதத்திற்கு நம்பிக்கையாக இருங்கள். எந்தமதத்தை வழிபட்டாலும் பக்தியாக இருப்பவரை எனக்குபிடிக்கும். பக்தியாக இருந்தால் ஒழுக்கம் வரும்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...