மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள்

ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள் என்று பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழநெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மேடையில்பேசிய சிவாஜிலிங்கம், காவிரிக்காக தமிழகமக்கள் குரல் கொடுப்பதை போன்று ஈழத் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் குரல்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய கவிஞர் காசி ஆனந்தன், சிங்களர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் ஆட்சியாளர்களை மாற்றுவது தொடர்பானது என்றும் தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பானது என்றும் கூறினார்.

பின்னர் பேசிய அண்ணாமலை, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன் பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியப் படுத்தாமல் மறைமுகமாக ரத்து செய்து விட்டதாக சாடினார். கச்சத்தீவு யாரிடம் உள்ளது என்பது முக்கிய மில்லை என்றும் கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் மீன்பிடிப்பதற்கு ஏதுவாக சட்டப்பிரிவு 6-ஐ அரசியலமைப்பில் சேர்க்கவேண்டும் என்றும் கூறினார். மேலும், தனிஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறியநாடாக அதுதான் இருக்கும் என்று கூறிய அண்ணாமலை, இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கிற ஒரே மனிதர் நரேந்திர மோடிதான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.