மக்களின் இதயங்களில் தேசபக்தியை தூண்டுவதே இந்தமுயற்சியின் பின்னணி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை இந்தியமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்றழைக்கப்படும் விடுதலை அமிர்தப்பெருவிழா என்பது 75 ஆண்டுகால சுதந்திரம் மற்றும் அதன்மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.

மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதே இந்தமுயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இல்லம் தோறும் மூவண்ணக் கொடி ஏற்றும் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பலர் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமானபதிலில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்தஇயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனைப் பங்கேற்பைப் பார்க்கிறோம்.

விடுதலை அமிர்தப் பெருவிழாவை குறிக்க இது ஒருசிறந்த வழியாகும். மூவண்ணக் கொடியுடன் உங்கள் புகைப்படத்தையும் hargartiranga.com என்ற இணையதளத்தில் பகிரவும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...