நவீனகால சுப்ரமணிய சிவாக்கள்

“தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்றார் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் இது சாதாரணமான வார்த்தை ஜாலமன்று, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியங்களை கொண்ட பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வேத, இதிகாச, புராணங்களின் தத்துவியலாகும். பரந்துபட்ட பாரதம் எத்தனையோ சிற்றரசர்களால் ஆளப்பட்ட போதிலும், மக்கள் அரசனை மதித்தனர், தேசபற்றின் அடையாளமாக மண்ணையும், அரசின் கொடிதனையும் வணங்கினர்.

இதன் நீட்சியாக தான் அந்நியனின் அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை மீட்டெடுக்க பாரத அன்னை உருப்பெற்றால். 1873இல் கிரண் சந்திர பானர்ஜியால் சுதந்திர தாகத்தை தூண்டும் பாரத் மாதா நாடகம் அரங்கேற்ற பட்டது. பாரத அன்னையை போற்றிடும் வந்தே மாதரம் பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882இல் இயற்றப்பட்டது. பிபின் சந்திர பால் பண்பாட்டு வழக்கங்களுடன் இதன் உருவகத்தை ஒருங்கிணைத்து தேசியத்தை அடையாளப்படுத்தினார்.

பாரத மாதா தோற்றமும், வந்தே மாதர முழக்கமும், சுதந்திரப் போராட்ட வேட்கைக்கு உரமிட்டன. சுப்ரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் சித்தரஞ்சன் தாஸ் முன்னிலையில் பாரதமாதா ஆலயத்துக்கு 1923ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்காக அன்று ஆங்கிலேயன் கொடுத்த நெருக்கடிகள் ஏராளம் என்றால்!. சுதந்திர பாரதத்தில் தமிழகத்தில் அதேபோன்றொரு நிகழ்வு தொடர்வது கேவலம்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு மரியாதை செய்ய சென்ற பாஜக நிர்வாகிகள் தடுக்கப்பட்டதே சமீபத்திய சான்று. பூட்டப்பட்ட மண்டபத்தினை திறக்க மறுத்ததால். பாஜக.,வின் கே.பி ராமலிங்கம் தலைமையிலான தொண்டர் படை பூட்டுடைத்து தரிசித்துள்ளது. அவர்கள் எதையும் திருட வில்லை, கொள்ளையடிக்க போகவில்லை, சேதப்படுத்த செல்லவில்லை. குறிப்பாக பூட்டுடைத்து பாரத அன்னைக்கு மீண்டும் ஒரு சுதந்திரத்தையே பரிசளித்தனர்.

சுப்பிரமணிய சிவாவே நேரில் வந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார். ஆனால் கே.பி ராமலிங்கம் போன்றோர் கைது செய்யப்பட்டு ஒரு வார சிறைக்கு பின்னேதான் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். தேச பற்றில் முரட்டுத்தனம் இருந்திருக்கலாம் அதை ரசியுங்கள். தேச பற்றே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செயகிறார்கள் அவர்களை பிடியுங்கள். கே.பி.,ராமலிங்கம் போன்றதொரு நவீனகால சுப்ரமணிய சிவாக்கல் இருக்கும் வரை பாரத தேசம் மங்கா புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...