நவீனகால சுப்ரமணிய சிவாக்கள்

“தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்றார் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் இது சாதாரணமான வார்த்தை ஜாலமன்று, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியங்களை கொண்ட பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வேத, இதிகாச, புராணங்களின் தத்துவியலாகும். பரந்துபட்ட பாரதம் எத்தனையோ சிற்றரசர்களால் ஆளப்பட்ட போதிலும், மக்கள் அரசனை மதித்தனர், தேசபற்றின் அடையாளமாக மண்ணையும், அரசின் கொடிதனையும் வணங்கினர்.

இதன் நீட்சியாக தான் அந்நியனின் அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை மீட்டெடுக்க பாரத அன்னை உருப்பெற்றால். 1873இல் கிரண் சந்திர பானர்ஜியால் சுதந்திர தாகத்தை தூண்டும் பாரத் மாதா நாடகம் அரங்கேற்ற பட்டது. பாரத அன்னையை போற்றிடும் வந்தே மாதரம் பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882இல் இயற்றப்பட்டது. பிபின் சந்திர பால் பண்பாட்டு வழக்கங்களுடன் இதன் உருவகத்தை ஒருங்கிணைத்து தேசியத்தை அடையாளப்படுத்தினார்.

பாரத மாதா தோற்றமும், வந்தே மாதர முழக்கமும், சுதந்திரப் போராட்ட வேட்கைக்கு உரமிட்டன. சுப்ரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் சித்தரஞ்சன் தாஸ் முன்னிலையில் பாரதமாதா ஆலயத்துக்கு 1923ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்காக அன்று ஆங்கிலேயன் கொடுத்த நெருக்கடிகள் ஏராளம் என்றால்!. சுதந்திர பாரதத்தில் தமிழகத்தில் அதேபோன்றொரு நிகழ்வு தொடர்வது கேவலம்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு மரியாதை செய்ய சென்ற பாஜக நிர்வாகிகள் தடுக்கப்பட்டதே சமீபத்திய சான்று. பூட்டப்பட்ட மண்டபத்தினை திறக்க மறுத்ததால். பாஜக.,வின் கே.பி ராமலிங்கம் தலைமையிலான தொண்டர் படை பூட்டுடைத்து தரிசித்துள்ளது. அவர்கள் எதையும் திருட வில்லை, கொள்ளையடிக்க போகவில்லை, சேதப்படுத்த செல்லவில்லை. குறிப்பாக பூட்டுடைத்து பாரத அன்னைக்கு மீண்டும் ஒரு சுதந்திரத்தையே பரிசளித்தனர்.

சுப்பிரமணிய சிவாவே நேரில் வந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார். ஆனால் கே.பி ராமலிங்கம் போன்றோர் கைது செய்யப்பட்டு ஒரு வார சிறைக்கு பின்னேதான் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். தேச பற்றில் முரட்டுத்தனம் இருந்திருக்கலாம் அதை ரசியுங்கள். தேச பற்றே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செயகிறார்கள் அவர்களை பிடியுங்கள். கே.பி.,ராமலிங்கம் போன்றதொரு நவீனகால சுப்ரமணிய சிவாக்கல் இருக்கும் வரை பாரத தேசம் மங்கா புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...