நவீனகால சுப்ரமணிய சிவாக்கள்

“தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்றார் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் இது சாதாரணமான வார்த்தை ஜாலமன்று, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியங்களை கொண்ட பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வேத, இதிகாச, புராணங்களின் தத்துவியலாகும். பரந்துபட்ட பாரதம் எத்தனையோ சிற்றரசர்களால் ஆளப்பட்ட போதிலும், மக்கள் அரசனை மதித்தனர், தேசபற்றின் அடையாளமாக மண்ணையும், அரசின் கொடிதனையும் வணங்கினர்.

இதன் நீட்சியாக தான் அந்நியனின் அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை மீட்டெடுக்க பாரத அன்னை உருப்பெற்றால். 1873இல் கிரண் சந்திர பானர்ஜியால் சுதந்திர தாகத்தை தூண்டும் பாரத் மாதா நாடகம் அரங்கேற்ற பட்டது. பாரத அன்னையை போற்றிடும் வந்தே மாதரம் பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882இல் இயற்றப்பட்டது. பிபின் சந்திர பால் பண்பாட்டு வழக்கங்களுடன் இதன் உருவகத்தை ஒருங்கிணைத்து தேசியத்தை அடையாளப்படுத்தினார்.

பாரத மாதா தோற்றமும், வந்தே மாதர முழக்கமும், சுதந்திரப் போராட்ட வேட்கைக்கு உரமிட்டன. சுப்ரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் சித்தரஞ்சன் தாஸ் முன்னிலையில் பாரதமாதா ஆலயத்துக்கு 1923ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்காக அன்று ஆங்கிலேயன் கொடுத்த நெருக்கடிகள் ஏராளம் என்றால்!. சுதந்திர பாரதத்தில் தமிழகத்தில் அதேபோன்றொரு நிகழ்வு தொடர்வது கேவலம்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு மரியாதை செய்ய சென்ற பாஜக நிர்வாகிகள் தடுக்கப்பட்டதே சமீபத்திய சான்று. பூட்டப்பட்ட மண்டபத்தினை திறக்க மறுத்ததால். பாஜக.,வின் கே.பி ராமலிங்கம் தலைமையிலான தொண்டர் படை பூட்டுடைத்து தரிசித்துள்ளது. அவர்கள் எதையும் திருட வில்லை, கொள்ளையடிக்க போகவில்லை, சேதப்படுத்த செல்லவில்லை. குறிப்பாக பூட்டுடைத்து பாரத அன்னைக்கு மீண்டும் ஒரு சுதந்திரத்தையே பரிசளித்தனர்.

சுப்பிரமணிய சிவாவே நேரில் வந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார். ஆனால் கே.பி ராமலிங்கம் போன்றோர் கைது செய்யப்பட்டு ஒரு வார சிறைக்கு பின்னேதான் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். தேச பற்றில் முரட்டுத்தனம் இருந்திருக்கலாம் அதை ரசியுங்கள். தேச பற்றே வேண்டாம் என்று முரண்டு பிடிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செயகிறார்கள் அவர்களை பிடியுங்கள். கே.பி.,ராமலிங்கம் போன்றதொரு நவீனகால சுப்ரமணிய சிவாக்கல் இருக்கும் வரை பாரத தேசம் மங்கா புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...