ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம்

புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட்டது.

இதையடுத்து, இன்று (மே.,27)ம் தேதி, மத்தியகலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதினம், பிரதமர்மோடியிடம் செங்கோலை வழங்கினார்.

தொடர்ந்து, மதுரைஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் ஆகியோரிடம், பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

மதுரை, தருமபுர ஆதீனங்கள்இருவரும், ஆதினங்களின் நினைவு பரிசை வழங்கி, பிரதமருக்கு ஆசிவழங்கினர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் என் இல்லத்துக்கு வந்திருப்பது அதிர்ஷ்டம்.சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம்செய்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னமான செங்கோல், புதியபாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த செங்கோல், நாம் கடமையின் பாதையில் நடக்கவேண்டும், பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை, நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு புனிதசெங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தசெங்கோல் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக வைக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து, வெளியே கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...