பட்டியலின மக்களுக்கான 3000 கோடியை மடைமாற்றிய திமுக

அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையைத் தொடங்கியவர், தேவர் சிலைபகுதி வரையிலும் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சிநிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தைப் பார்வை யிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.

தொடர்ந்து, வரும்காலங்களில் இந்தத்தொழில் நலிவடையாமல் இருக்க தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிகப் பழைமை யானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தி யிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானா மதுரையில் செய்யப் பட்டவை என்று சொல்லப் படும் அளவுக்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்தஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்தநிதியைத்தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்திருக்கின்றனர். யார்பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டி நாடு பகுதியினருக்குச் சொந்தமாக மடம் போன்ற ஓர்இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...