பட்டியலின மக்களுக்கான 3000 கோடியை மடைமாற்றிய திமுக

அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையைத் தொடங்கியவர், தேவர் சிலைபகுதி வரையிலும் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சிநிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தைப் பார்வை யிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.

தொடர்ந்து, வரும்காலங்களில் இந்தத்தொழில் நலிவடையாமல் இருக்க தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிகப் பழைமை யானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தி யிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானா மதுரையில் செய்யப் பட்டவை என்று சொல்லப் படும் அளவுக்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்தஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்தநிதியைத்தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்திருக்கின்றனர். யார்பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டி நாடு பகுதியினருக்குச் சொந்தமாக மடம் போன்ற ஓர்இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...