மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி

தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்குவீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவுவங்கி அருகே நிறைவு செய்தார்.

இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, “தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாத யாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. அதுவும் கார்த்திகை தீபதிருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்புவாய்ந்தது.தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்தபணியும் முறையாக நடைபெறவில்லை. மிகமோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்துசெய்துள்ளது.

நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்த வில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ்  போட்ட ஒரேஅரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம்கோடிக்கு மேல் நிதிவழங்கி உள்ளது.ஆனால் எந்த திட்டங்களும் தஞ்சையில் முறையாக நடைபெற வில்லை. மேலும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உதான் திட்டத்தின்கீழ் தஞ்சாவூரின் விமான நிலையத்தில் இருந்து 20 இருக்கைகள் கொண்ட சிரியரக விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்பி தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் பாஜக உறுப்பினரை தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச்செய்ய மக்கள் முன்வர வேண்டும். டெல்டா பகுதியில் குறிப்பாக எங்களுக்கு சிறப்புகவனம் உள்ளது, காரணம் இந்தியா உணவு உற்பத்தி செய்யவேண்டிய நாடாகத்தான் இருக்க வேண்டும். கையேந்தகூடிய நாடாக மாறக் கூடாது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யார் அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்போகிறோம் என்று தான் போட்டி உள்ளது” என பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...