சைவர்கள் கொண்டாடும் இராம பிரான்… இராவணனைக் கொன்றப் பழி தீர, இராமபிரான் பூஜித்தது இராமேஷ்வரம் கோவில் இலிங்கம் இந்த இலிங்கம் தான் சீதாதேவியார், மணலால் பிடித்துவைத்த இலிங்கம்.இங்கு பூஜிக்கச் சிவலிங்கம் கொண்டுவரும் பொருட்டு, அனுமான் காசிக்குச் சென்று வரத் தாமதம் ஆகிய நிலையில் கொண்டுவந்து சேர்த்த இலிங்கம், காசி விஸ்வநாதர் எனத் தனியாக வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் சிவபெருமான் புகழையும் இராமேஷ்வரம் கோவிலை கட்டிய இராமபிரான் புகழையும் பாடியுள்ளார்கள்.
சம்பந்தர் தேவாரம் 3 ம் திருமுறை பாடல் 10 மற்றும் 101 அப்பர் பெருமான் தேவாரம் 4 ம் திருமுறை 61 வது பாடல். சைவம் சொல்கிறது அடியாருக்கும் அடியேன் என்று ஈசன் வணங்கி அவன் அருளை பெறுவதை விட அவன் அடியார்களை வணங்கி ஈசன் அருளை எளிதாக பெற்று விடலாம்.
இராமேஷ்வரம் கோவிலை கட்டி வழிபட்ட இராமபிரானுக்கும் அடியேன்
இராமேஷ்வரத்தை வழிபட்டால் நம் வினை தீருமாம் சம்பந்தர் சொல்கிறார்
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன் பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற, ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.
இராமன் நாட்டில் இராமநாதரை தந்த அயோத்தி நாயகனின் அயோத்தியில் இராமபிரான் ஆலயம் கும்பாபிஷேகம் இந்த உலகையே மாற்றி அமைக்கட்டும் அன்பின் வழியில்.
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
#Ayothaya #ayothiramartemple #jaishriram #JaiSriRam #ஸ்ரீராமஜெயம்
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |