யார் சங்கி…?

சங்கிகள் என்பவர்கள் எல்லா காலமும் உண்டு, இந்து மதம் எப்பொழுதெல்லாம் ஆபத்தில் சிக்குமோ அப்பொழு தெல்லாம் உருவாகி வருவார்கள். அலெக்ஸாண்டர் படைகளை எதிர்த்த புருஷோத்தமன் முதல், செலுகஸின் படையினை எதிர்த்த‌ சமுத்திர குப்தன் முதல் சங்கி, அவன் வழியில் ஆப்கானிய படைகளை எதிர்த்த எல்லோருமே சங்கி
பவுத்த மதத்தின் பிடியில்இருந்து இந்தியாவினை விடுவித்த ஆதிசங்கரர் ஒரு சங்கி, சமணரை வேரறுத்த நாயன்மார்களும் சங்கி

இலங்கை பவுத்தரை அடக்கி, காலமுள்ள காலம் அளவும் சைவம் நிலைத்திருக்க தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜன் சங்கிகள் தலைவன்
நாயக்க அரசின் அடித்தளத்தை இந்து அடிப்படையில் அதை காக்க உருவாக்கிய முனிவர் வித்யாகர் ஒரு சங்கி, மராட்டிய அரசர் சிவாஜியினை உருவாக்கிய ஆசானும் சங்கி

நாயக்க மன்னர்களும் சங்கி, சிவாஜியும் சங்கி 1800களின் பிற்பகுதியில் கிறிஸ்தவ அழிச்சாட்டியத்தை எதிர்த்த சேதுபிள்ளை, ஆறுமுக நாவலர் போன்றோரும் சங்கி, அந்த சைவ சிந்தாந்த கழகத்தாரும் சங்கி, மனோன்மணி சுந்தரம்பிள்ளையும் சங்கி கண்ணதாசனும் சங்கி, ஜெயகாந்தனும் சங்கி, அந்த சோ ராமசாமியும், சங்கிகளில் பிரதான கிருபானந்தவாரியும் சங்கி
இப்பொழுது போலி திராவிட கும்பலையும் அவர்களின் புரட்டையும் எதிர்ப்போரும்,

சினிமாக்காரனின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்குரல்(முகநூலில்) கொடுப்பவனும் சங்கி  சங்கி என்பது இங்கு கலாச்சாரம், அது காவல் காக்கும் அடியவர்கள் பெயர், இந்த மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வரும்பொழுதெல்லாம் உருவாகிவரும் சக்தியின் பெயர் சங்கி
அது முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகவாதிகள்,இக்கால நம்பிக்கையுடையோர், இன்று பொறுக்கமுடியா பொய் பித்தலாட்டங்களை இந்துமதத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்போர் என்ற பெரும் வரிசையின் பொதுசொல் சங்கி
அந்த சங்கிகள் எக்காலமும் உண்டு, இக்காலத்திலும் உண்டு, எதிர்காலத்திலும் வருவார்கள்.

வீரம் என்றால் வீரம், தர்க்கம் என்றால் தர்க்கம், ஆச்சரியம் என்றால் பதிலுக்கு பேராச்சரியம், பேச்சுஎன்றால் பேச்சு, எழுத்து என்றால் எழுத்து என இந்த மண் எக்காலமும் தனக்கான பாதுகாப்பை ஒவ்வொரு வடிவிலும் செய்து கொண்டே இருந்தது

இன்னும் எக்காலமும் செய்யும். அந்த ஆன்மீகமும் தைரியமும் உண்மையும் சத்தியமும் தாங்கி நிற்கும் உருவின் திருபெயரான இம்மண்ணுக்கும் அதன் தாத்பரிய நம்பிக்கைக்கும் காவலாக‌ உருவான ஞானிகள், அரசர்கள்,‌ அடியார்கள், ஆழ்வார்களின் இன்றைய பெயரான சங்கி என்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டும்.

அந்த பெருமையில் உரக்க சொல்ல வேண்டும், நாம் இந்த நாட்டின் பாரம்பரியத்தை காக்கவந்த ஞானமும் தைரியமும் மிக்க , பக்திமிக்க பரம்பரையின் சங்கிகள், அதைகாப்பதை தவிர கடமையும் பொறுப்பும் ஏதுமில்லை..சங்கி என்பது பெருமை, சங்கி என்பதுகடமை, சங்கி என்பது மண்ணின் உரிமை. படித்ததில் பிடித்தது.
இந்த அருமையான தகவலை பதிவு செய்த நண்பர் யாரோ..?அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...