பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோருக்கு, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா புதுதில்லியில் நேற்று (05.07.2024) நடைபெற்றது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
ஆயுதப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
10 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும், 26 பேருக்கு சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகளும், ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
வெல்லமுடியாத துணிச்சல், கடமையில் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |