பழுது பார்க்கும் உரிமை குறித்த தளம் குறித்த ஆலோசனை

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை வாகனங்ளைப் பழுதுபார்க்கும் நடைமுறைகளை எளிதில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழுதுபார்ப்பதற்கான உரிமை ( https://righttorepairindia.gov.in/ ) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுகர்வோரின் உரிமைகளை நிலைநிறுத்தவும், சிக்கல் இல்லாமல் வாகனப்பழுதுபார்ப்பை மேற்கொள்ளும் வகையிலும் இந்த தளம் அறமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வாகன நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் வாகன தொழில்துறை சங்கங்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன.  இந்த நிறுவனங்கள் இந்த தளத்தில் இணைய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

பழுது பார்ப்பு தொடர்பாக அனைவரும் அணுகக்கூடிய பழுதுபார்ப்பு கையேடுகள் மற்றும் வீடியோக்களை  அதிகம் வெளியிட வேண்டியதன் அவசியத்தை செயலாளர் திருமதி கரே வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் பழுது பார்ப்பு சேவைகளை வழங்குதல்,  எளிதில் பழுதுபார்க்கும் சூழலை ஏற்படுத்துதல், உதிரி பாகங்கள் உரிய முறையில் கிடைப்பது, சுய பழுதுபார்ப்பு குறித்த விரிவான கையேடுகளை வெளியிடுதல் போன்றவை அவசியம் என்று அவர் வலியுறுததினார்.

இந்தக் கூட்டத்தில் ஏசிஎம்ஏ, எஸ்ஐஏஎம் போன்ற வாகனத் தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, ரெனால்ட்ஸ், போஷ், யமஹா மோட்டார்ஸ் இந்தியா, ஹோணடா கார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...