உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா விவாதம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா குடும்பக் கட்டுப்பாடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று விவாதித்தார். “தாய்-சேய் நலனுக்காக ஆரோக்கியமான காலமும், கருவுறுதலில் இடைவெளியும்” என்ற மையப்பொருளில்  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர்  அனுப்பிரியா பட்டேல் முன்னிலை வகித்தார்.

உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினை இந்தியா கொண்டிருப்பதை எடுத்துரைத்த  அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  மறுஉறுதி செய்யும் வகையில், உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  சிறு குடும்பங்கள் என்ற நெறிமுறையை சாதித்து இந்தியாவில் உள்ள குடும்பங்களை ஆரோக்கியமாக  பராமரிப்பதன் மூலமே,  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்று  அவர் கூறினார்.

குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான தெரிவு பெண்களின் உரிமை என்பதை உறுதி செய்வதற்கும், விருப்பமில்லாத கருவுறுதல் சுமையை உருவாக்காமல் இருப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள், கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான குடும்ப நல இயக்கம் என்பது பற்றி பேசிய திரு நட்டா, இது முதலில் 7 மாநிலங்களின் 146 உயர் முன்னுரிமை மாவட்டங்களில் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் இந்த மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும், 6 வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலை கடைக்கோடி பகுதி வரை பரவலாக்கிய சுகாதார, முன்கள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் டாக்டர் நட்டா பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல், மத்திய அரசின் குடும்ப நலத்திட்டம் ஏற்கனவே இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டதாகவும், தற்போது தயாரிப்பு கட்டம், சமூகப் பங்கேற்பு, சேவை வழங்குதல் என்ற  3 நிலைகளில் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, சுகம் என்ற குடும்பக்கட்டுப்பாடு மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டதோடு, உலக மக்கள் தொகை தினம் 2024-க்கான நடப்பாண்டின் மையப்பொருள் குறித்த சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்  சுகாதாரத்துறை, முதன்மை செயலாளர்கள் தங்களின் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...