பெண்களுக்கு எதிரான வன்முறையை அறிகுறி நோய் என்று கூறியதற்கு கண்டனம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ‘அறிகுறி நோய்’ என்று கூறுவதற்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் பாரதி கல்லூரியில் இன்று நடைபெற்ற ‘வளர்ந்த பாரதத்தில்  பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், “நான் திகைத்துப் போனேன்; உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் பதவி வகிக்கும் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர், இப்படி நடந்து கொள்வது எனக்கு வேதனையையும், சற்றே ஆச்சரியத்தையும் அளிக்கிறது,  அவர் என்ன சொல்கிறார்? இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறதா? என்ன ஒரு அவமானம்! அத்தகைய நிலைப்பாட்டைக் கண்டிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அது உயர் பதவிக்கு மிகப் பெரிய அநீதி இழைப்பதாகும்’’என்றார்.

இதுபோன்ற ஆத்திரமூட்டும் சம்பவங்கள் சர்வசாதாரணமானவை என்று உயர் பதவியில் இருப்பவர்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமது வேதனையை வெளிப்படுத்திய திரு தன்கர், இந்த அறிக்கைகள் மிகவும் வெட்கக்கேடானவை என்றார். இதுபோன்ற அறிக்கைகள் நமது பெண் குழந்தைகளின் துயரங்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கு ஒப்பானவை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  “ஒருதலைப்பட்சமான நலனுக்காகவா? சுயநலத்திற்காகவா? உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் இதுபோன்ற கொடூரமான அநீதியை இழைக்க நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்களா? இதைவிட மனித குலத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்ன இருக்க முடியும்? நம் பெண்களின் துயரத்தை நாம் சிறுமைப்படுத்துகிறோமா? இல்லை, இனி இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“போதும் போதும்” என்ற குடியரசுத் தலைவரின் அறைகூவலை எதிரொலிக்குமாறு குடிமக்களுக்கு  அழைப்பு விடுத்த திரு தன்கர், “போதும் போதும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்!” என்று கூறினார். போதும் என்ற இந்த தெளிவான அழைப்பு தேசிய அழைப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த அழைப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு பெண்ணையோ, பெண் குழந்தையையோ பலியாக்கும்போது இனி பூஜ்ஜிய விட்டுக்கொடுப்பு, பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவோம். நீங்கள் எங்கள் நாகரிகத்திற்கு தீங்கு விளைவிக்கிறீர்கள், நீங்கள் மேன்மையைக் காயப்படுத்துகிறீர்கள், நீங்கள் ஒரு அரக்கனைப் போல நடந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் காட்டுமிராண்டித்தனத்தை மிகக் கொடூரமான மட்டத்திற்கு எடுத்துக்காட்டுகிறீர்கள். எதுவும் வழியில் வரக்கூடாது, நாட்டில் உள்ள அனைவரும் குடியரசுத் தலைவரின்  விவேகமான, எச்சரிக்கைக்கு சரியான நேரத்தில் செவிசாய்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அவர் கூறினார்.

நமது சிறுமிகள் மற்றும் பெண்களின் மனதில் உள்ள அச்சம் கவலைக்குரியது என்று கூறிய தன்கர், “பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக உணராத சமூகம் ஒரு நாகரிக சமூகம் அல்ல. அந்த ஜனநாயகம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது; அதுவே நமது முன்னேற்றத்திற்கும், இன்றைக்கும் மிகப்பெரிய தடையாக உள்ளது’’ என்றார்.

“எங்கள் சிறுமிகள் மற்றும் பெண்களின் மனதில் உள்ள பயம் கவலைக்குரியது, ஒரு தேசிய கவலை. பாரத பூமியில் சிறுமிகள், பெண்கள் எப்படி பாதுகாப்பற்றவர்களாக இருக்க முடியும். அவர்களின் கௌரவம் எப்படி களங்கப்படுத்தப்பட முடியும்?… மருத்துவமனையில் பெண் மருத்துவர் மனிதநேயத்திற்கு சேவை செய்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் போது?” என்று குடியரசுத் துணைதலைவர் கூறினார்.

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு நிதி சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்திய திரு தன்கர், “நீங்கள் ஒவ்வொருவரும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும்என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆற்றலையும் திறனையும் கட்டவிழ்த்து விட இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

“நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் மிகமுக்கியமான பங்குதாரர்கள். அவர்கள்  கிராமப்புற பொருளாதாரம், வேளாண் பொருளாதாரம் மற்றும் முறைசாரா பொருளாதாரத்தின் வலிமையான முதுகெலும்பாவார்கள் ” என்று அவர் மேலும் கூறினார்.

பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வாதிடுதல்; சமூகத்தில் பெண்களுக்கான  ஊதியம் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் தற்போதுள்ள பாலினஏற்றத்தாழ்வை அவர் எடுத்துரைத்தார். ஆனால் இன்று பாலின ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்ல முடியுமா? ஒரே தகுதி ஆனால் வெவ்வேறு ஊதியம், சிறந்த தகுதி ஆனால் சமமான வாய்ப்புகள் இல்லை. அந்த மனநிலை மாற வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்பு சமமானதாக இருக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் அழிக்கப்பட வேண்டும்” என்று தன்கர் மேலும் கூறினார்.

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிப் பாதையை எடுத்துரைத்த அவர், நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முழு பங்கேற்பு இல்லாமல் இந்த முன்னேற்றத்தை அடைய  முடியாது என்று வலியுறுத்தினார். “சிறுமிகள் மற்றும் பெண்களின் பங்களிப்பு இல்லாத இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற எண்ணம் பகுத்தறிவுக்கு உகந்ததல்ல. அவர்களிடம் ஆற்றல் இருக்கிறது, திறமை இருக்கிறது. உங்கள் பங்களிப்பால், வளர்ந்த இந்தியா என்ற கனவு 2047-ம் ஆண்டுக்குள் நிறைவேறும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம் தேவை குறித்து கவனத்தை ஈர்த்த குடியரசு துணைத் தலைவர், பொது சிவில்  சட்டம் என்பது ஒரு அரசியலமைப்பு ஒழுங்கு. இது நெறிமுறைக் கோட்பாடுகளில் உள்ளது. இது பல வழிகளில் உதவும், ஆனால் முக்கியமாக இது உங்கள் பாலினத்திற்கு உதவும் என்றார். ஆளுமையில் மகளிரின் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பாராட்டிய தன்கர், “நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலசட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இடஒதுக்கீடு வழங்குவது ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சி கொள்கை வகுப்பதில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், சரியான நபர்கள் முடிவெடுக்கும் பதவிகளுக்கு சரியான இடத்தை பெறுவதை உறுதி செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு வேலைகளில் இளைஞர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவது குறித்து கவலை தெரிவித்த தன்கர், “சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கிடைக்கும் பரந்த வாய்ப்புகளை நான் பார்த்தேன், அனுபவித்தேன், இருப்பினும் அரசு வேலைகள் மீதான கவர்ச்சியான அர்ப்பணிப்பு எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்றார்.

தேசிய நலனுக்கான சவால்களை, குறிப்பாக தேச விரோத கதைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து  நடுநிலையாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு தன்கர், “உலகம் நம்மைப் பாராட்டுகிறது, இருப்பினும் சிலர் எதிர்மறையை பரப்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நலன்களை விட தேச நலனை வைத்திருக்கிறார்களா? “தேசம், தேசிய நலன் மற்றும் வளர்ச்சி என்று வரும்போது, நாம் அரசியல், பாகுபாடு மற்றும் சுயநலனை ஒதுக்கி வைக்க வேண்டும்” என்று அவர் அனைத்து குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

 

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இருத்தலியல் அச்சுறுத்தல் குறித்து பேசிய தன்கர், நமது பூமியைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். ‘அன்னையின் பெயரால் ஒரு மரம்’ முன்முயற்சிக்கான பிரதமரின் அழைப்பை எதிரொலித்த குடியரசுதுணைத்தலைவர் , ஒவ்வொருவரும் தங்கள் தாய்மார்கள் மற்றும் பாட்டிகளை கௌரவிக்கும் வகையில் மரங்களை நட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த உன்னதநோக்கத்தில் குடிமக்கள் இணையவேண்டும் என்றுஅழைப்பு விடுத்த அவர், இந்த முன்முயற்சியின் வளர்ந்து வரும் தாக்கத்தை வலியுறுத்தினார். “என்னை நம்புங்கள், பிரதமரின் அழைப்பு உண்மையான ஈர்ப்பைப் பெறுகிறது. ஆனால் நீங்கள் அதைச் செய்யும்போது, அதை தவறாமல் செய்யும்போது, முடிவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும், “என்று அவர் கூறினார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், தில்லி பல்கலைக்கழக  பாரதி கல்லூரியின் தலைவர் பேராசிரியர் கவிதா சர்மா, தில்லி பல்கலைக்கழக பாரதி கல்லூரி முதல்வர் பேராசிரியர் சலோனி குப்தா, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...