தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ரயில் சேவை இயக்கவும், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையை போத்தனூர் வரை நீட்டிக்கவும், கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய ரயில் நிறுத்தம் ஏற்படுத்தவும், மைசூரு- மயிலாடுதுறை எக்ஸ்பிரசை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், தற்போது வாரம் 5 நாள் இயக்கப்படும் மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 8.20 மணிக்கும், பகல் 13.05-க்கும் புறப்பட்டு கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரயில்கள் போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுகிறது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிறு தவிர பிற நாட்களில் இயக்கப்பட்டு வந்த ரயிலும் இனி போத்தனூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்தின் முதலாவது சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் 2024 ஜூலை 19 காலை 10.55 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா, சட்டமன்ற உறுப்பினர்
திரு ஏ கே செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் எமகரிபா பர்வின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில், 2024 ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 22.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 19.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட் கிழமை காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மேலும் கோவை- திருப்பதி ரயிலுக்கு சாமல்பட்டியில் வழங்கப்பட்டுள்ள புதிய நிறுத்தம் வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்ட சேவையையும் அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்திலிருந்து 19-ம் தேதி காலை 10.55 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...