பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்தித்து கலந்துரையாடிய போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் அந்தந்த பிரதேசங்களில் உருவாகும் அச்சுறுத்தல்களை வெளியில் இருந்து பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனது கால் தடங்களை இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் விஸ்தரிக்க பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. அதில் சமீபத்திய பின்னடைவுக்கான நிகழ்வாக இலங்கையை கூறலாம். சீன ஆதரவாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் இலங்கை மக்களால் துரத்தப்பட்டு நாடே வெறுக்கும் நபர்களாகி விட்டனர்.
மேலும் நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்டறிவது சவாலான ஒன்றாகியுள்ளது. இந்தியப் இந்திய பெருங்கடலுக்கு கடுமையான அச்சுறுத்தல்களாக இவை இருப்பதால், மாiலதீவை நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் கொண்டுவர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இது முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா 24 வாகனங்களை வழங்கும். 61 தீவுகளில் பாதுகாப்பு வசதிகளை உருவாக்க இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்
இந்தியாவும் மாலைதீவுகளும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் பரந்துபட்ட ஒத்துழைப்புகள் குறித்து இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |