கல்யாண முருங்கை

 முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான மரம்.

கல்யாண முருங்கை இலையுடன் பச்சைப்பருப்பைச் சேர்த்துச் சமைத்து பிரசவமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அடிக்கடி சாப்பிட்டுவர குழந்தை பிறந்தபின் பால் குறைபாடு இருக்காது.

கல்யாண முருங்கை விதையின் பருப்பை எடுத்து நன்கு உலர்த்தி இடித்துச் சலித்து எடுத்தச் சூரணம் 5 அரிசி எடை கொண்டு அதில் கல்யாண முருங்கை இலைச்சாறு விட்டு குலைத்துச் சாப்பிட குடற்பூச்சிகள் வெளியேறும்.

கல்யாண முருங்கை இலைச்சாறு 500 மி.லியில் 600 கிராம் சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஒரு சீசாவில் சேர்த்து பத்திரப்படுத்தவும். இதில் 4 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர ஒரு வாரத்தில் உடல் குறைய ஆரம்பிக்கும். தேவையான அளவு உடல்குறையும் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதை ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது.

கல்யாண முருங்கை சாற்றை காலை மாலை நான்கு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் மாதவிடாய்க்கு முன் பின் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

One response to “கல்யாண முருங்கை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...