தூய்மையான காற்றுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது

நீலவானத்திற்கான சர்வதேச தூயக்காற்று தினம் செப்டம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது. தூயக் காற்றுக்கு உலகளாவிய அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும்வகையில், 2019-ம் ஆண்டு ஐநா பொதுச்சபை இந்த தினத்தை அறிவித்தது. காற்றின் தரத்தைமேம்படுத்தி மனிதகுல சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக  இந்த முன்முயற்சி அமைந்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 7 அன்று ஜெய்பூரில் நீலவானத்திற்கான சர்வதேச தூயக் காற்று தினம் “#தூயக்காற்றில் இப்போது முதலீடு செய்யுங்கள்” (“Invest in #CleanAirNow.”) என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,  ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய தூயக் காற்று திட்டத்தின் கீழ், கவனம் குவித்த செயல்பாடுகள் காரணமாக 95 நகரங்களில் காற்று மாசு அளவு குறைந்திருப்பதாக இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. இவற்றில் 51 நகரங்களில்  அடிப்படை ஆண்டான 2017-18 உடன்  ஒப்பிடுகையில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக  பிஎம்10 அளவு  குறைந்திருந்ததாகவும், 21 நகரங்களில் இது 40 சதவீதத்தை தாண்டி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டுடன் வெற்றிபெற்ற நகரங்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்ட தூய்மைக் காற்று ஆய்வு விருதுகள் வழங்கப்பட்டன.

24 மாநிலங்களைச் சேர்ந்த 131 நகரங்களில் காற்று மாசினை கட்டுப்படுத்த நிதியாண்டு 2019-20 முதல் நிதியாண்டு 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ. 19, 614. 44 கோடி தேசிய தூயக்காற்று திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதுவரை  ரூ.11,211.13 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தூயக் காற்று திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக ப்ராணா போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இந்த போர்ட்டலில் கிடைக்கும். இது எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு உதவியாக இருக்கும்.

தூயக்காற்று திட்டத்தை செயல்படுத்த நகர்ப்புறங்களில் மரக்கன்றுகள் நடுதலை ஊக்குவிக்கும் பல்வேறு முன்முயற்சிகளைமத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியான நகர வனத்திட்டம், 2020-ல் தொடங்கப்பட்டது. உள்ளூர்சமூகங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் இந்தத் திட்டம்செயல்படுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 385 திட்டங்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.

தேசிய தூயக் காற்று இயக்கத்திற்கு ஆதரவாக “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற அரசின் முன்முயற்சி அமைந்துள்ளது. இது மரக்கன்றுகள்நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்ற கலாச்சாரத்தை வளர்ப்பதாகும்.  குடிமக்களிடையே மரக்கன்றுகள் நடுதலை இந்த இயக்கம் வலுப்படுத்துவதுடன், சமூக பந்தங்களை ஏற்படுத்தி பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதாகும். மேலும் காற்று மாசினை  தடுப்பதற்கு மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...