’23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிரதமர் மோடி முதல்வராகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகள் பொது வாழ்வில் நிறைவு செய்துள்ளார். ஒரு நபர் தனது முழு வாழ்க்கையையும் தேச நலன் மற்றும் பொது சேவைக்காக எவ்வாறு அர்ப்பணிக்க முடியும். இந்த 23 ஆண்டு கால சாதனை, தனித்துவமான அர்ப்பணிப்பின் அடையாளமாகும். மோடியின் இந்த சாதனைக்கு நான் சாட்சியாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
ஏழைகள் நலன், மேம்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை எவ்வாறு செய்ய முடியும் என்பதை மோடி செய்து காட்டினார். பிரச்னைகளை துண்டு துண்டாகப் பார்க்காமல், நாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வை அளித்தார். தன்னைப் பற்றி கவலைப்படாமல், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |