சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் 11 வரை  10 நாள் நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற பதாகையின் கீழ் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 நாள்  சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நாடு முழுவதும், சிறுமிகளின் உரிமைகள் பற்றிய விவாதங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், அவர்களின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலை ஆதரிக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில்  சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஈடுபடுத்தின. மரக்கன்றுகள் நடும் இயக்கங்கள், பள்ளி செல்லும் திறமையான சிறுமிகளை கௌரவித்தல், “மகள்களுடன் செல்ஃபி” இயக்கங்கள், கன்னி பூஜை விழாக்கள், சுகாதார முகாம்கள், கருத்தரங்குகள்,  விளையாட்டு நிகழ்வுகள், சிறுமிகளிடையே சுறுசுறுப்பான பங்கேற்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல் ஆகியவை செயல்பாடுகளில்  அடங்கும்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கருத்து தெரிவித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, “நமது பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல; இது பிரகாசமான எதிர்காலத்திற்கான நமது பார்வை. அவர்களின் உரிமைகள் மற்றும் திறனை அங்கீகரிப்பதன் மூலம், ஒவ்வொரு பெண்ணும் செழித்து வளரும் ஒரு சமத்துவ சமூகத்திற்கு வழி வகுக்க முடியும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...