ஜார்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யாதா? அமித் ஷா கேள்வி

”ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா?” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார்.

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

தேர்தலில் தோற்றால், உடனே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காங்., குற்றஞ்சாட்டுகிறது. தோல்வியை ஏற்காத அக்கட்சி நிர்வாகிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வெளியாகின. மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்த காங்., மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குற்றஞ்சாட்டியது. அப்படியென்றால், ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா? அங்கு எந்த பிரச்னையும் அக்கட்சிக்கு இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு தான், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காங்., குறை கூற போகிறது?

மத்தியில், 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., நாட்டு மக்களின் நலனுக்காக அல்லாமல், ஒரு குடும்பத்தின் நலனுக்காக, 77 முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. அதே சமயம், 16 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பா.ஜ., 22 முறை மக்களின் நலனுக்காகவே அரசியலமைப்பில் திருத்தம் செய்தது.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை காங்கிரஸ் மீறியது. தாஜா அரசியல் செய்யும் காங்கிரஸ், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...