ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல்

” 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 வன்முறை சம்பவங்களும், பாகிஸ்தானில் 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது, ” என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக

2022 ல் 47

2023 ல் 302

2024 டிச., 08 வரை 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

இதுவே பாகிஸ்தானில்

2022 ல் 241

2023 ல் 103

2024 அக்., வரை 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வங்கதேச அரசுடன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தூதரக ரீதியில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மத சகிப்புத்தன்மை, மதவெறி வன்முறை, முறையான துன்புறுத்தல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளோம். மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை சர்வதேச அரங்குகளில் இந்தியா எடுத்துக் காட்டுகிறது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தவிர, வேறு எந்த அண்டை நாட்டிலும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...