ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல்

” 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 வன்முறை சம்பவங்களும், பாகிஸ்தானில் 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது, ” என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக

2022 ல் 47

2023 ல் 302

2024 டிச., 08 வரை 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

இதுவே பாகிஸ்தானில்

2022 ல் 241

2023 ல் 103

2024 அக்., வரை 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வங்கதேச அரசுடன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தூதரக ரீதியில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மத சகிப்புத்தன்மை, மதவெறி வன்முறை, முறையான துன்புறுத்தல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளோம். மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை சர்வதேச அரங்குகளில் இந்தியா எடுத்துக் காட்டுகிறது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தவிர, வேறு எந்த அண்டை நாட்டிலும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...