H.M.P வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ஜேபி நட்டா

”சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி., நோய்த்தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறினார்.

அவர் கூறியதாவது:

எச்.எம்.பி.வி., என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, 2001ம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல்லாண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ், காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். வசந்தகாலத்தின் ஆரம்ப நாட்களிலும் பரவும்.

சீனாவில் சமீபத்தில் பரவி வரும் வைரஸ் தொடர்பான சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும் சூழலை மிகுந்த பொறுப்புடன் கண்காணித்து வருகிறது. விரைவில் அதன் அறிக்கையை நமக்கு அளிக்க இருக்கிறது. சுவாசக்கோளாறு தொடர்பான நோய்க்கிருமிகள் பாதிப்பில் திடீர் அதிகரிப்பு எதுவும் இந்தியாவில் இல்லை என்பது தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.நிலைமையை ஆய்வு செய்ய, சுகாதாரப்பணிகள் பொது இயக்குனர் தலைமையில் கூட்டுக்குழு கூட்டம் ஜன.,4ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் முழுமையான கண்காணிப்பில் உள்ளனர்.

சுகாதார ரீதியில் ஏற்படக்கூடிய எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...