அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்கிரெஸ் தான் -அமித் ஷா பதிலடி

 அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., தான். அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது அவரது பெயரில் அரசியல் செய்கிறது,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது; அம்பேத்கர் விவகாரத்தில் உண்மையை மறைக்க காங்., முயற்சி செய்கிறது. இதனால் என் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து திரித்து குறை கூறுகின்றனர். என் பேச்சை முழுமையாக கேட்க வேண்டும்.

தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பார்லி.,யில் பேச முடியும். மகளிர், அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., நமது நாட்டின் தியாகிகள், ராணுவம், பெண்களை அக்கட்சி அவமதிக்கிறது. அக்கட்சி தனக்கு தானே பாரத ரத்னா விருது கொடுத்துக் கொண்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நேருவும், இந்திராவும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்., ஆட்சியை இழந்த பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நேரு உள்ளிட்ட காங்கிரசார் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டனர். நேரு தனது புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய எதிர்ப்பு இருந்தது. அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, பிரதமராக இருந்த நேருவுக்கு எழுதிய கடிதத்தில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பி.சி.ராய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், ராஜினாமாவால் அமைச்சரவை பலவீனம் அடையாது என நேரு கூறினார். காங்., அம்பேத்கரை எப்படி அவமதித்ததற்கு என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் இருக்க முடியாது. அவரின் ராஜ்யசபா பேச்சுகளை காங்கிரஸ் அழித்தது.

அவரின் பிறந்த நாளைக் கூட அக்கட்சி கொண்டாடவில்லை. அம்பேத்கரின் கொள்கையை உயர்த்தி பிடிப்பது மோடி அரசு மட்டுமே. அவரை பா.ஜ., எதிர்க்கவில்லை. அவரின் புகழை உலகம் முழுதும் நிலை நாட்டினோம். பா.ஜ.,வினர் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுகிறார்கள். ஆனால், அவரின் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளது.

இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் இருந்து காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. 1952க்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் அம்பேத்கரை தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கமாக இருந்தது. இரண்டு முறை தோற்கடித்தது. அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இன்று அம்பேத்கர் பெயரில் அரசியல் செய்கின்றனர்.

நான் ராஜினாமா செய்ய வேண்டும் என கார்கே சொல்கிறார். இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், நான் அதனை செய்வேன். ஆனால்,அத்துடன் அவரது பிரச்னை தீராது. ஏனென்றால், அடுத்த 15 ஆண்டுகள் அவர் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...