பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

”பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தகர்த்துள்ளது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’ சார்பில், ‘அதிகாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து, வளர்ச்சி அடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் என, அனைத்து துறைகளிலும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது.

பெண்கள் முன்னேற்றம் அடையாமல், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல், நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது. அதை உணர்ந்து, பிரதமராக மோடி பதவியேற்றது முதல், பெண்கள் நலனை மையப்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே, 12 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு; 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு; 17 கோடி பெண்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சொந்தக்காலில் நிற்க, அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீஸ் நிலையங்களில் மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள், 10 பெண் காவலர்கள் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், 866 விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 410 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றங்கள். இதனால், 2.53 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பிக்கி பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா அபிஷேக், நிர்வாகி சுதா சிவகுமார் ஆகியோர், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”அரசியல்வாதிகள் எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாக சொல்லி விடுவர். எனக்கு சமைப்பது, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நேரில் சென்று வாங்குவது பிடிக்கும். அப்படி, சென்னையில் காய்கறிகள் வாங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளானது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...