அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேச துரோகி – ஜேபி நட்டா விமர்சனம்

யமுனை நீர் விஷமானது என்று கூறிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தேச விரோதி என, பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்தார்.

கிருஷ்ணா நகரில் நடந்த தேர்தல் பேரணியில் அவர் ஆற்றிய உரை:

யமுனையில் ஹரியானா விஷத்தைக் கலக்கிறது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு தேச விரோதி. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக டில்லி மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

டில்லி மற்றும் ஹரியானா மக்களை ஒருவருக்கொருவர் எதிராக அவர் நிறுத்துகிறார். மக்களிடையே பீதியை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். அவர் அரசியலில் இருக்க தகுதியற்றவர்.

யமுனை சுத்தம் செய்யும் திட்டங்களில் ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி அரசு 8,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. யமுனையை சுத்தப்படுத்தும் விவகாரம், ஆம் ஆத்மி அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

டில்லியில் பா.ஜ., அரசு அமைக்க நீங்கள் முடிவு செய்துள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இது சாதாரண தேர்தல் அல்ல; டில்லியின் தலைவிதியையும் பிம்பத்தையும் மாற்றுவதற்கான தேர்தல் இது. இந்தத் தேர்தல், ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து டில்லியை விடுவிப்பது பற்றியது.

டில்லி பேருந்துகளில் அபாய பொத்தான்களை பொருத்தியதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. இந்த விவகாரத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ‘ஷீஷ் மஹாலி’ல் தான் அபாய பொத்தான் பொருத்த வேண்டும். அங்குதான் பெண்களுக்கு அவமதிப்பு நடந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...