யமுனை நதி சீர்கெடுவதற்கு கெஜ்ரிவால் தான் காரணம் – அமித்ஷா குற்றச்சாட்டு

“யமுனை நதி சீர்கெடுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் காரணம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

ரோஹிணியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல யமுனையை சுத்தம் செய்வதாக ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் கேட்கும் நிலையில், ஹரியானாவில் உள்ள பா.ஜ., அரசு ஆற்றில் விஷம் கலந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யாகக் குற்றஞ்சாட்டினார்.

ஹரியானா அரசுக்கு எதிரான கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, கீழ்த்தரமான அரசியல். ஊழல் காரணமாக ஆம் ஆத்மி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் யமுனையை சுத்தம் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று கெஜ்ரிவாலிடம் சொல்ல வந்துள்ளேன்.

கெஜ்ரிவால், நீங்கள் யமுனை நதியை மாசுபடுத்தி, அதன் தண்ணீரை குடிக்க மக்களை கட்டாயப்படுத்தினீர்கள். மேலும் நதியை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டிய அனைத்து பணத்தையும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு கொடுத்தீர்கள்.

சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த பிறகு, கெஜ்ரிவால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். கெஜ்ரிவால், உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், டில்லியை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை நாங்கள் காண்பிப்போம்.

ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியில் முழு டில்லியையும் அரவிந்த் கெஜ்ரிவால் குப்பைத் தொட்டியாக மாற்றினார்.

இவ்வாறு பேசிய அமித்ஷா, ஆம் ஆத்மி அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் பட்டியலிட்டு பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...