டில்லியை குப்பை கிடங்காக கெஜிரிவால் மாற்றிவிட்டார் – அமித்ஷா

டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனை நதியை மாசுபடுத்தி விட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. தலைநகரின் மோசமான நிலைக்கு கெஜ்ரிவால் நிர்வாகமே காரணம். டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனையை மாசுபடுத்தி விட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.

டில்லியில் சரியான கழிவுநீர் வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், டில்லியில் மழையால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பை ஏற்காமல் சாக்குப்போக்குகளை தொடர்ந்து கூறுகிறது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் தனது தோல்விகளை மறைக்க அற்ப அரசியலை கெஜ்ரிவால் செய்து வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யமுனையில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. மேலும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என்று கெஜ்ரிவால் சாக்குப்போக்கு கூறுகிறார். டில்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை அகற்றி பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால் மாற்றம் ஏற்படும். டில்லியை உலகின் முதல் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...