ராணுவ தளவாட ஏற்றுமதியில் உயர்வு – ராஜ்நாத் சிங் பெருமிதம்

‘நாட்டின் ராணுவ ஏற்றுமதி 2024 – -25ம் நிதியாண்டில், 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 12.04 சதவீதம் அதிகம்’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

கடந்த 2023 – 24ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ ஏற்றுமதி ஏற்றுமதி, 21,083 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2024 – 25ம் நிதியாண்டில், 12.04 சதவீதம் அதிகரித்து, 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், 2029க்குள் ராணுவ ஏற்றுமதியை, 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் இலக்கை அடைவதை நோக்கி நம் நாடு முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2024 – -25ம் நிதியாண்டில், ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியில், 42.85 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது, உலக சந்தையில் இந்திய தயாரிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.

‘ராணுவ தளவாடங்களில், பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, தற்போது சுயசார்பு இந்தியாவாக மாறி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளது’ என, ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...