‘டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்’ என, புதிய முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான ரேகா குப்தா, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், ஆதிஷி ஆகியோருக்குப் பிறகு டில்லியின் நான்காவது பெண் முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
டில்லியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்த முக்கியமான வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உறுதிபூண்டுள்ளேன்.
முன்னதாக அவர் நேற்று முன்தினம் சட்டசபை பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன் ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
இந்த நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக நான் உறுதியளிக்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்துள்ள பா.ஜ., தலைமைக்கு நன்றி. முதல்வர் பதவியின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த அனைத்து உயர் தலைமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |