தமிழக மக்களை குழப்புவதே திமுக – வின் நோக்கம்- அண்ணாமலை

‘அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. எம்.பி., தொகுதிகள் குறையும் என பிரச்னையை ஆரம்பித்தது முதல்வர் ஸ்டாலின். நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புரளியை பரப்பி வருகின்றனர்.

தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம். விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டோம். தெளிவாக விளக்கம் சொன்ன பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் எதற்காக? தொகுதி மறுசீரமைப்பு பற்றி புரிந்துக் கொள்ளாமல் மக்களை குழப்புகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்த போதும் தி.மு.க., மக்களை குழப்பியது. தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசாமல் மக்களை திசை திருப்புகின்றனர்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரிப்பது காங்கிரசின் திட்டம். அரசியலில் இருந்து வைகோ போன்றவர்கள் ஓய்வு பெற வேண்டும். முதல்வர் தனது பிறந்தநாள் விழாவில், மேடையில் ஏறி பா.ஜ.,வை திட்டினார். பா.ஜ.,வை யார் அதிகமாக திட்டுவது என்ற போட்டி தான் அவர்களுக்குள் இருந்தது. 4 ஆண்டுகளில் என்ன வேலை செய்தீர்கள் என்று பேச வேண்டியது தானே? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...