இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தனிவிசா வழங்குவதை சீனா நிறுத்தி உள்ளது.
கடந்த ஓராண்டாக காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் சீனா தனி விசா வழங்கி வந்தது. இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனாவுக்கு திபெத் எந்த அளவு முக்கியமோ , அதைவிட காஷ்மீர் இந்தியாவுக்கு முக்கிய மான இடம் என குறிப்பிட்டிருந்தது.
இன்னிலையில் சீன பிரதமர் வென் ஜியாபோ புதன்கிழமை இந்தியா வரவிருக்கிறார், இந் நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.