நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

‘தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்கள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நெசவை மையத் தொழிலாக கொண்டு இயங்குகின்றன. பல லட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், தேசத்தின் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உழைத்து வருகின்றன.

கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை, விசைத்தறியாளர்கள் வலியுறுத்தினர்; எந்த பலனும் கிடைக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களோடு, தமிழக பா.ஜ., துணை நிற்கிறது என்று அறிந்த அடுத்த 24 மணி நேரத்தில், விசைத்தறியாளர்களின் முதல்கட்ட கோரிக்கைகளுக்கு, அரசு செவிமடுத்துள்ளது. அம்மக்களுக்கும், அவர்களுடன் துணைநின்ற பா.ஜ.,விற்கும் கிடைத்த வெற்றி. ஆரம்பத்திலேயே துறை அமைச்சர்கள், உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று, போராட்டத்தை வாபஸ் பெற வைத்திருக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால், ஒரு மாதப் போராட்டம், அதனால் வந்த இழப்புகளையும், விசைத்தறியாளர்கள் சந்தித்த மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், உழைக்கும் மக்கள் பிரச்னைகளை புறக்கணிக்கும் விதமாகவே, அரசு தொடர்ந்து நடக்கிறது.

அதே அணுகுமுறையையே விசைத்தறியாளர்கள் விவகாரத்திலும் கடைப்பிடித்தது. நெசவாளர்களுக்கு தி.மு.க., அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக, நெசவாளர்களுக்கான தனி கூட்டுறவு வங்கி; தடையின்றி நுால் கிடைக்கும் வகையில் அரசு கொள்முதல் நிலையங்கள்; கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி, 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு; உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...