கசாப் தூக்கிலிடப்பட்டதை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்

 கசாப் தூக்கிலிடப்பட்டதை  பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரேஒரு பயங்கரவாதியான அஜ்மல்கசாப், புணே எரவாடா சிறையில் புதன் கிழமை ரகசியமாக தூக்கிலிடப்பட்டார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ்ஹோட்டல் உள்பட பல் வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் கள் நடத்தப்பட்டதில் 166பேர் பலியாகினர். இந்த_தாக்குதல்களை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல்கசாப் மட்டும்தான் உயிருடன் சிக்கினான்.

பாகிஸ்தான் தீவிரவாதியான கசாபுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அவனது கருணை மனுவை நிராகரித்ததை யடுத்து அவன் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப் பட்டான். அவனை தூக்கிலிட கடந்த 8ம் தேதியே முடிவுசெய்யப்பட்ட போதிலும் அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக்கொள்ள பாகிஷ்தான் அரசு மற்றும் அவரது உறவினர்கள் முன்வராததால் . சிறை வளாகத்திலேயே கசாப் உடல் புதைக்கபபட்டது.

சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கசாப் தூக்கிலிடப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.கசாபின் தூக்கு தண்டனை , போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும விதமாக அமைந்துள்ளது

முன்னதாக, மும்பை ஆர்தர்சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கசாப் நவம்பர் 19ஆம் தேதி புணே எரவாடா_சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான் .

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் உஜ்வல்நிகம் கூறுகையில், “”கசாப் தூக்கிலிட ப்பட்டது நாட்டுக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

காசாப் சிறையில் இருந்த கால கட்டத்தில் பாதுகாப்புக்காக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் 250 பேர், சிறைவளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இப்போது அந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...