டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழகத்தின் குறைகளை எடுத்துக்கூற போதுமான அவகாசம் கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துவதும் அம்மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமல் புறக்கணிப்பதும் வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் தொடர்பான மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதும். காவிரி பிரச்சினை. மின்சாரம். மண்ணெண்ணெய் வழங்குதல் போன்ற பல விஷயங்களில் தமிழகத்தின் நலனுக்கு புறம்பாக நடந்து கொள்வதும் மத்திய காங்கிரஸ் அரசின் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் கவலைகளை எடுத்துக் கூறக்கூட வாய்ப்பளிக்காமல் தமிழக முதல்வரை அவமதித்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். மத்திய அரசின் தவறான இந்த செயலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அழைத்து வைத்து அவமானப்படுத்தும் இச்செயலை இனிமேலும் தொடரக் கூடாது என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.