குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ள நரேந்திரமோடிக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. ஆரோன் ஸ்ஷோக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இல்லிநாய்ஸ் மாகாணத்தின் குடியரசு கட்சியின் எம்பி.யான ஆரோன், அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மோடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் செல்கின்றன . குஜராத்தில் எல்லோரும் முன்னேறும்வகையில் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்.
இதற்குமுன்பு 2 முறை அவர் முதல்வராக பதவி ஏற்று சிறந்தமுறையில் ஆட்சிசெய்ததால் 3-வது முறையும் படித்தவர்கள், தொழிலதிபர்கள், மதவாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவோடு மோடி வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைபிடித்துள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதாரணமாக யாரும் தேர்ந்தெடுக்க படுவதில்லை. அவர்களின் ஆட்சியின்கீழ் நிர்வாகம் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துத் தான் ஒருமுடிவுக்கு வருகிறார்கள் . கடந்த பத்து வருடத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் தொழில் வளம் பெருகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் ஆரோன் தெரிவித்தார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.