கடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்

 கடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல் கோல்கட்டாவில், விஸ்வ நாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வனாக , 1863, ஜனவரி 12ம் ஆண்டு அவதரித்தார். நரேந்திரன் என்று பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றை கற்று ஆன்மிகஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டார்.

துறவியானபிறகு அவருக்கு வந்தபெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால்தான் ஆனந்தம் பிறக்கும் என்பதை தன் பெயரின் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக் காட்டினார். இமயம் முதல் குமரிவரை பயணம்செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களை போதித்தார்.

இந்து மத பெருமையை உலக அரங்கில் நிலை நாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகா சபை மாநாட்டில் பங்கேற்று, அரிய தொரு சொற் பொழிவை நிகழ்த்தினார்.

மற்றவர்க ளெல்லாம் அங்கு வந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என்று அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்து வத்துடன் "டியர் சிஸ்டர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ' என்று ஆரம்பித்து, உலகமக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதரி சகோதரகலே என்ற கருத்தை ஆணித்தரமாக சொன்னார். அந்த ஒருவார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

"கோழைகளுடனோ , அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும்குப்பை," என முழங்கினார். ஒரு நாள், அவர் தற்செயலாக கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின்முன் நின்றதை ஒரு போட்டோ கிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள "கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி" போஸ்டராக அச்சடித்து நகர்முழுக்க தொங்கவிட்டது. அந்தப்படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாக வே கருதினார். அதற்குகாரணம் அவர் குருவிடம் கற்ற பாடம்தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்று நோயால் சாப்பிடமுடியாமல் சிரமப்பட்டார். "நீங்கள்தான் காளிபக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசு வீர்களே! போய் அவளிடம் குணமாக் கேளுங்கள்," என்றார் விவேகானந்தர். "கேவலம், இந்த உடலை குணமாக்கு வதற்காக அவளிடம் நான் கையேந்த மாட்டேன்," "என உறுதியாக சொல்லி விட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறுவழியின்றி காளியை வழிபட்டுவந்தார்"."அம்பாள் என்னசொன்னாள், குணமாக்கி விடுவாளா?" என விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே, "இல்லை! நீ சாப்பிடா விட்டால், உனக்காக பலவாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!" என்று அவள் திருப்பிக் கேட்டாள். நான் வந்து விட்டேன்," என்றார்.மற்றவர்கள்_சாப்பிட்டால் தான் சாப்பிட்டதுபோல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக் கொண்டது.

ஜெய்ப்பூர் மன்னரின் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசை நிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக் காண செல்லாமல், தனது அறையில் இருந்தார். அப்போது, ஒருபெண் பாடியபாடல் அவருக்கு கேட்டது. அதில் சோகம் இழை யோடியது. அதைக்கேட்டு மனம் இளகிய அவர் இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்றார்.""இவள் நடனப் பெண். இழிந்ததொழில் செய்பவள். மற்றவர்களின் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளதுபாடல் எனக்கு புதிய பாடத்தை கற்று தந்தது. தன்வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாக பாடினாள். அதைக்கேட்டு உள்ளம் உருகினேன்," என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சை கேட்ட அவள், அவரதுவருகை தன்னை ஆசிர்வதித்ததாக சொன்னாள். இழிந்ததொழில் செய்தவர்களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர்.

அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச்சென்று நடுப் பாறையில் அமர்ந்து தியானம்செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத் துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம்பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத் தரட்டும். அந்த துணிவு வெற்றிக்கனியை பறித்துத் தரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...