ஸ்டாலினுக்கு ‘குட்டி மோடி’ போல ஆக ஆசை இருக்கிறது

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டுஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பாஜக சார்பில், சென்னை கீழ்ப் பாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜகவினர் போல, எந்தகட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. 2014 லோக் சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, பாஜக ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது பாஜகவின் சிறப்பான சமூக நீதிக்கொள்கைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதிகூட, திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூகநீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின் பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பிவருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒருபழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் முக.ஸ்டாலினுக்கு காய்ச்சல்வந்துவிட்டது.

சமூகநீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம்இருக்கிறதா? தனிமனிதனுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்றபின் சாதனை நாடாக மாற்றிகாட்டியவர் நரேந்திர மோடி. புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, ‘குட்டிமோடி’ போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான மக்கள் சேவையாற்ற வேண்டும்.

திமுகவைப் பொறுத்தவரை கட்சி தான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வர வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்துவந்தார். தமிழகத்தில், ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் துணிவு இருக்கிறதா? வரும் லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பாஜகவுக்கு 25 எம்.பி.,க்கள் கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்தமாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரைமலரும். இந்த மண்ணில் என்றென்றும் பாஜக ஆட்சி தொடரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...