ஸ்டாலினுக்கு ‘குட்டி மோடி’ போல ஆக ஆசை இருக்கிறது

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டுஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பாஜக சார்பில், சென்னை கீழ்ப் பாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜகவினர் போல, எந்தகட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. 2014 லோக் சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, பாஜக ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது பாஜகவின் சிறப்பான சமூக நீதிக்கொள்கைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதிகூட, திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூகநீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின் பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பிவருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒருபழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் முக.ஸ்டாலினுக்கு காய்ச்சல்வந்துவிட்டது.

சமூகநீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம்இருக்கிறதா? தனிமனிதனுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்றபின் சாதனை நாடாக மாற்றிகாட்டியவர் நரேந்திர மோடி. புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, ‘குட்டிமோடி’ போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான மக்கள் சேவையாற்ற வேண்டும்.

திமுகவைப் பொறுத்தவரை கட்சி தான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வர வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்துவந்தார். தமிழகத்தில், ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் துணிவு இருக்கிறதா? வரும் லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பாஜகவுக்கு 25 எம்.பி.,க்கள் கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்தமாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரைமலரும். இந்த மண்ணில் என்றென்றும் பாஜக ஆட்சி தொடரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...