நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு; சிபிஐ

 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர் ஆகியோரடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூடி முத்திரையிட்ட உறையில், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அறிக்கை, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,”ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியின் போது 2006-2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், நிறுவனங்களின் பொறுப்புடைமையை சரிபார்க்காமலே நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ. வாகன்வதி வாதிடுகையில்,”சிபிஐ-க்கு இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் இல்லை. சிபிஐ விசாரணையை முடக்க நான் முயற்சிக்கவில்லை. சிபிஐ விசாரணை செய்வதில் எனக்கு பிரச்னை இல்லை. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை சிபிஐ தொடரட்டும் என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “அரசின் கருத்து சிபிஐயின் விசாரணையைப் பாதிக்கலாம் என்பதால், கருத்தை எச்சரிக்கை உணர்வுடன் கூற வேண்டும். அரசின் எந்த கருத்தும் விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது. சூழ்ச்சியான கோணத்தில் விசாரணையை எதிர்கொண்டால், அது விசாரணையைப் பாதிக்கும்.சுரங்க ஒதுக்கீடுக்காக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சிறு நிறுவனங்களைத் தேர்வு செய்து விருப்ப அடிப்படையில் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது ஏன் என்று அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.மேலும், கடந்த 8ஆம் தேதி தாக்கல் செய்த நிலவர அறிக்கை தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும். அவரால் தணிக்கை செய்யப்பட்ட, அரசியல் நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொள்ளப்படாத அதே நிலையை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த அறிக்கையால் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...