சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-வின்  முதல் 15 நாட்களிலேயே, மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. “நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் கீழ் ஐதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 12.10.2024 அன்று தொடங்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, எரிசக்திக்காக  வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுரங்க அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், 1.6 டன் அலுமினியக் கழிவுகளைப் பயன்படுத்தி, வியப்பூட்டும்  சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்தக் கலைப்படைப்பு தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 6-ல் உள்ள ராணி லட்சுமிபாய் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தூய்மை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சியாக, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்,  புவி பாரம்பரிய மற்றும் புவி சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காண்பதிலும், சுரங்க அமைச்சகம், பொது மக்களின் 80% கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...