பாலி (இந்தோனேசியா) இந்துக்களின் சொர்க பூமி

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI). இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்

முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்தியபிறகு இந்து மதத்தைவிட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம்தேதி இந்த மௌனதினம் வருகிறது. இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம்செய்வார்கள்.

2. பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான். பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளைபற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில்வரும் அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைபற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாதநிலையில், இந்த ரிஷிகளைபற்றி பாலி  குழந்தைகள்கூட தெரிந்துவைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆண் , பெண் என இருபாலருக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலிகோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்லமுடியாது. இந்தியாவில்கூட சில கோவில்களில் தான் பாரம்பரியஉடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்துகோவில்களிலும் நமது உடை அணிந்துதான் செல்லவேண்டும்.

4. பாலியின் அரசியல் சமூக, பொருளாதார, கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana எனும் கோட்பாட்டின் படிதான் அமைந்துள்ளது. அதை தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள். Parahyangan – Pawongan – Palemahan என பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரியநமஸ்காரம். அணைத்து பாலிபள்ளிகளிலும் கட்டயாமாக மூன்றுவேலை சூரியநமஸ்காரம் செய்கிறார்கள். அதேபோல மூன்றுவேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்ல வேண்டும். பொதுவாக பாலிரேடியோவில் மூன்றுவேலை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

6. பாலி கோவில்பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மதநாடான இந்தோனேசியாவில் அனைத்து மதகோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசேகொடுக்கிறது. ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ்செல்ல பணத்தை வாரிஇறைக்கின்றது.

7. இந்தோனேசியாவின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்தியகலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசிவிளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது, பாலிதீவு முழுவதும் அரிசி  வயல்கள்தான் இருக்கின்றது. பாலிமக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ் ரீதேவி, பூ தேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்குதான் படைக்கிறார்கள். அனைத்துவயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இருதெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9 வது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதி முறைகளை இந்து பெரியோர்கள்  கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என பெயர். இங்கே நீர்பாசனம் முழுவதும் கோயில் பூசாரிகளின் கட்டுபாட்டில்தான் இருக்கும். உலகவங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டுவந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி இந்துக்கள் பூஜை செய்யும்பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதில்லை. இன்றும்கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலைசுவடியையே (Lontar) பயன் படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்துதிருக்கும்.ராமாணய ஓலை சுவடியை நல்ல நாட்களில் எடுத்துவரும் திருவிழா நடை பெறும்.

10. அனைத்து திருவிழாகளிலு ம் பாலிநடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாகசொல்வார்கள். இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உலகின் அழகியதீவுகளில் பாலி முக்கிய இடம்வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கைமுறை, பாரம் பரியமிக்க ஹிந்துகலாச்சாரம், நடனம், இசை என இந்த தீவு உலக சுற்றுலாபயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும்இல்லை.

Tags; பாலி தீவு, பாலி மொழி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...