ஆடிப்பட்டம் தேடி விதை

 ஆடிப்பட்டம் தேடி விதை "ஆடிப்பட்டம் தேடி விதை"—இது பழமொழி–…சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம்..ஆடியில் காற்றுடன்.. மழையும் பெய்யும்.அதனால் ஆடியில் நெல் விதைத்தால்,…..தை மாதத்தில் நல்ல மகசூல்…இதனால் வந்தது..இந்த பழமொழி..

" ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் …அதில் நான் எந்த மூலை"—இது மனைவியரின் கோபத்திற்கு முன் பணிந்து போகும் கணவன் மார்களின் புலம்பல்….

ஆடி –ஒரு பண்டிகை மாதம்…ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியுமே புனிதமான கிழமைகள்…..ஆடி வெள்ளியில் பாம்பு புற்றுக்கு பூஜை செய்து நாகம்மனுக்கு..பால் ஊற்றினால், பிள்ளைகளுக்கு படிப்பும் ஆயுளும், விருத்தியாகும் என்பது, ஆண்டாண்டுகால உண்மையும் நம்பிக்கையுமாகும்…

ஆடி வெள்ளியில் கோயில்களில் அம்மனுக்கு விசேஷ அலங்காரங்கள், கண்கொள்ளாக் காட்சியாகும்..ஒவ்வொரு வெள்ளிக்கும், ஒவ்வொரு "பழங்களாலான பாவடைகளை"- சாத்துவர்..

ஆடிப்பூரம் அன்று, ஸ்ரீரெங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மற்றும் ஆண்டாள் உள்ள கோயிலகளின் அனைத்து சந்நிதிகளிலும்..,அன்றுதான் ஆண்டாளின் பிறந்தநாள் என்பதால்– 10—12 நாட்கள் நடக்கும், மிகவும், விசேஷமான கொண்டாட்டங்கள் இருக்கும்…அது விசேஷமான பண்டிகை நாளுமாகும்.

ஆடிப் பதினெட்டு என்பது "பதினெட்டாம் பேறு"—என புது வெள்ளம் பாய்ந்து வரும் காவிரியிலும், தமிழ்நாடு முழுவதும், களிப்புடன் கொண்டாடப்படும் தினமாகும்.

அன்று புது மணப் பெண்கள் தங்கள் புதுத்தாலி பிரித்து, மாற்றுவர்…காவிரியின் கரை பிரதேசங்களிலும், கடற்கரைகளிலும், குடும்பம் குடும்பமாக உறவினர்களுடன், சித்ரான்னங்களுடன், மக்கள் சேர்ந்து உண்டு மகிழும் நாள்.

ஆடி அமாவாசை பூரணமான தஷிணாயன புண்யகாலம் ஆகும்….ஒருவருடத்தில் சித்திரை ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகள், "நீத்தார் கடன் தீர்க்க" நீர்நிலைகளில், தர்ப்பணம் செய்வது, மிகவும், விசேஷசமான புண்யமாகும்..அன்று ராமேஸ்வரம், காசி, கயாவில் கூட்டம் நெரியும்…

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்..ஆடி முதல் நாளன்று புதிதாக திருமணமான தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து, புத்தாடைகளுடன் விருந்தோடு, ஸ்பெஷலாக, சுவையான "ஆடிப்பால்" என்ற தேங்காய்ப் பால் " செய்வர்..

இப்படி சிறப்புவாய்ந்த ஆடிமாதம், புது மணமக்களுக்கு மட்டும் கசக்கும்..காரணம் இந்த மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைக்கும் பழக்கம் "ஆதிமுதல்"- உண்டு..ஆடியில்"–கரு" உருவானால், சித்திரையில் குழந்தை பிறக்கும்..சித்திரையும் வைகாசியும் வெப்பம் மிகுந்த காலமாகும்..அது தாய்க்கும், சேய்க்கும் துன்பம் விளைவிக்கும், ..
ஆடி..மாதம் அம்மன் கோயில்களின்..விசேஷ கூழுக்கு ருசி தனிதான்..பக்தியுடன் "தீ மிதித்தலும்" நடக்கும்..

ஆடியானாலும் தற்காலங்களில் அவசர திருமணங்கள் ஆடியிலும் நடப்பதுண்டு..

ஆடியில் தான் முஸ்லீம் மதத்தினரின் உயர்ந்த நோன்புப் பண்டிகையான ரமலான் என்னும் ரம்ஜான் வருகிறது..நபிகள் நாயகத்தின் உயர்ந்த நற்போதனைகளை மசூதிகளிலும், பத்திரிக்கைகளிலும், நற்செய்திகளாக மக்களுக்கு கூறப்படுகிறது.

மிக முக்கியமான ஆகஸ்டு சுதந்திர தினம் இவ்வருடம் ஆடி 30 ஆம் நாள் வருகிறது..

ஆக ஆடி மாதம் ஒரு அற்புதமான மாதந்தான்..

நன்றி;  ரேவதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...