திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல்குண்டு

 திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதில் அவரது மனைவி காயமடைந்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள்மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீடுமீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் செல்லி அம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (28). இவர் 10வது வார்டு பாஜக கிளைத் தலைவராக உள்ளார். இப்பகுதியில் உள்ள மாடி வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு 11.30 மணியளவில் பிரவீன் குமாரின் மனைவி சத்தியமீனாட்சி (24) வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த மர்ம நபர்கள் 2 பேர், பீடி பற்ற வைப்பதுபோல் தீக்குச்சியை கொளுத்தினர். திடீரென பெட்ரோல்குண்டை எடுத்து பற்றவைத்து வீடுமீது வீசினர். அது சுவரில் பட்டு வெடித்துசிதறியது. அப்போது சத்திய மீனாட்சியின் தலையில் தீ பட்டதில் முடி கருகியது. நிறை மாத கர்ப்பிணியான அவர், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல் போலீஸ் டி.எஸ்.பி சுருளி ராஜா, மேற்குசரக இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைநடத்தினர். தடய அறிவியல் நிபுணர் மணி தலைமையில் குழுவினர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் கிடைத்தபொருட்களை சேகரித்தனர். இந்தசம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் பாஜ பிரமுகர் வீட்டின்மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...