ராகுர்காந்தி மீது வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு

 ம.பி.,மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ்கட்சி பொதுக்கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல்காந்தி பேசினார். பெருகிவரும் கற்பழிப்புசம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியினபெண்களை நோக்கி, ‘மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பாஜக. ஆட்சியின்போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா?’ என பகிரங்கமாககேட்டார்.

பொதுஇடத்தில் பெண்களைபார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது – ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல்காந்தி மீது இன்று போபால் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என்று பாஜக. துணைத் தலைவர் பிரபாத்ஜா கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களின் கற்பழிப்புதொடர்பாக ராகுர்காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர்மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொருவழக்கும் போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.

இதேபோன்று , நர்மதாநதியை மத்தியபிரதேச மாநிலம் கற்பழித்துவிட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அவரதுபேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாகநினைத்து வழிபடும் ம.பி.,மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது. அவர் மீதும் பாஜக. சார்பில் தனிவழக்கு தொடுக்கப்படும் என பிரபாத்ஜா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...