உள்துறை அமைச்சகம் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக கடந்த 30ம் தேதி டில்லிக்கு சென்றார் தமிழக முதல்வர் கருணாநிதி,இந்த பயணத்தில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க படும் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது ,
ஆனால் அங்கு நிலைமையோ வேறுமாதிரி சென்றுகொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
தமிழக முதல்வர் கருணாநிதி தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சோனியா காந்தியை சந்தித்ததாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி , அகமது படேல் ஆகியோர் உடன் இருந்ததகவும் . அப்போது நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் , காங்கிரசுக்கு 80 தொகுதிகளும் . ஐந்து அமைச்சர் பதவிகளும், துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும்’ என்று , ராகுல் காந்தியின் விருப்பத்தை சோனியா காந்தி தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் கருணாநிதி எந்த பதிலையும் கூறாமல் அமைதியாக இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத வகையில், அதிகமான தொகுதிகளும் , துணை முதல்வர் பதவியும் காங்கிரஸ் கேட்டது முதல்வருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாளை சென்னையில் நடக்கவுள்ள திமுக.வின் பொதுக்குழுவில் காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்கபடும் என தெரியவருகிறது
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.