“மத்தியில் அமையவுள்ள புதிய அமைச் சரவை, நாட்டில் எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையிலும் இருக்கும்’ என பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குறைந்த எண்ணிக்கைகொண்ட அமைச்சரவையை உருவாக்க மோடி பரிசீலித்துவருகிறார். அதில், புதியவர்களுக்கும் திறமை வாய்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவும் சமூகநோக்குடன் செயல்படும் ஊழல் கறைபடியாதவர்களுக்கு முன்னிரிமை கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மோடியின் அமைச்சரவை எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தகூடிய வகையிலும் இருக்கும்’ என்றார்.
அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரியபிரதிநிதித்தும் அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அது பற்றி பாஜக மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து மோடி முடிவெடுப்பார் என்று அமித்ஷா கூறினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.