கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை ஒமர் அப்துல்லா பாராட்டு

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண் படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜகதலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்ய பட்டுள்ளது.

துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை சிலர் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்சி.,யுமான விக்ரம் ரந்தாவா சிலகருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சை கண்டித்தனர்.

அதையடுத்து, விக்ரம் ரந்தா வாவிடம் விளக்கம்கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் சுனில்சேத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தநோட்டீஸில், “ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்கமுடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “விக்ரம் ரந்தாவாவின் கருத்துகளை கேட்டதும் தனிப்பட்டமுறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் “அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் இவைமுற்றிலும் எதிரானவை’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர்கூறுகையில், “விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பை தூண்டும்வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசியமாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர்அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.