உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய 100 அந்நிய முதலிட்டுக்கு அனுமதி

 ராணுவத் தளவாடங்களை உற்பத்திசெய்யும் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்துவதற்கான மத்திய அமைச்சரவை குறிப்பை மத்தியத்தொழில் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை சுற்றுக்கு விட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் தற்போது 26 சதவீத அன்னியநேரடி முதலீட்டுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக மத்தியத்தொழில் துறை அமைச்சகம், 15 பக்கம்கொண்ட மத்திய அமைச்சரவை குறிப்பை வெள்ளிக்கிழமை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது குறித்து அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

“நாட்டுக்கு நல்லது’: இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில், “”பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், உள்நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில், தற்போது வெளி நாடுகளில் இருந்து 100 சதவீதம் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்து வரும் நிலைமாறி, உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கத் தொடங்குவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

ஆயுதங்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதற்குத்தேவையான அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும். ஆயுத உற்பத்தியில் நம் நாடு, நவீனமயமாவதோடு சுயச் சார்பு கொண்டதாகவும் ஆவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

அதேநேரத்தில், பாதுகாப்புத் துறையில் அன்னியநேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்த வேண்டுமா என்பது குறித்து உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது. இதில் சில முடிவுகளை வர்த்தகத்துறை அமைச்சகமும், வேறு சில முடிவுகளை மத்திய அமைச்சரவையும் எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

இதனிடையே, பாதுகாப்பு துறையில் அன்னியநேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கை அவசியமானது என்று ஆர்எஸ்எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் கூறுகையில், போர் விமானத்தில் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் வரை அனைத்து ராணுவ தளவாடங்களை பொருத்தமட்டில், இந்தியா இறக்குமதியையே சார்ந்துள்ளது. இது போல் ராணுவத்தேவைக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பது நல்லதல்ல. ஆகையால் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சி நியாயமானதே” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...