பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து, கேரளமாநிலம் அல்லாஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் அவதூறான கருத்தினை வெளியிட்டதற்காக கொல்லத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் பேரில் ராஜேஷ்மீது கொல்லம் போலீசார் வழக்கு பதிவுசெய்து, நேற்று இரவு அவரை பிடித்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று அவரை கைதுசெய்தனர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
மோடி பிரதமர் பதவி ஏற்றபின்னர் அவர் மீது கேரளாவில் அவதூறுகருத்து வெளியிடப்பட்டிருப்பது இது 3;வது தடவை ஆகும்.கடந்த ஜூன்மாதம் மோடி பற்றி அவதூறு கருத்துவெளியிட்ட 2 சம்பவங்கள் நடந்தன. அவற்றில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 9 பேரும், திருச்சூர் அருகேயுள்ள குழுர் பாலிடெக்னி கல்லூரி ஒன்றின் முதல்வரும், மாணவர்களும் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.